Tuesday, 7 December 2010

Manmadhan Ambu - மன்மதன் அம்பு : Kamal Kavithai - கண்ணோடு கண்ணைக்

கண்ணோடு கண்ணைக் கலந்தாள் என்றாள்
கலங்கமுள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கை கோர்த்தாளா
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை கழிகையில் கூடுதல் பேசினாள்
அனுபவமிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினாள்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
கவிதை இலக்கியம் பேசினாலாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச்சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கொள்
கூட்டல் ஒன்றே குறி என்றானது
கழிவது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக்கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள்
காமம் எனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப் பெண்ணுறைக்கெதிறாய் ஆணுறையொன்றை
ஏற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
ஆண்:
துணிவே அணியும் துணி என்றானபின்
அணி என்றதெதற்க்கு தனியே வருவேன்.
கலவி செய்கையில் காதில் பேசி
கணிதாய் மெலிதாய் கழுத்தைக் கவ்வும்
வெள்ளைப்பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்ததுபோல
கடும் நாற்றம் இல்லாத வாயும் வேண்டும்
காமக்க்கழிவுகள் கழுவும் வேளையில்

கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமயலின்போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் தின்தோள் வேண்டும்
மோதிக்கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்குப்பின்னால் துடிக்கும் இதயம்
அது ரத்தம் பாய்ச்சிய நெகிழ்த்திய சிந்தையும்
மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
புழங்கிடப் பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்க்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படி கணவன் வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வந்தருவாள் என் வரலட்சுமி எனக்
கடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்
(தேடி எங்க போனா அந்த பொண்ணு?
கமல்: பீச்சுக்குத்தான்)
பொடி நடை போட்டே எடை மெலியவெனக் கடற்க்கரை தோறும்
காலையும் மாலையும் தொந்திக் கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்!
மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்
வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்டதால் லட்சுமி உனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும் உதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் முண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்ச்சுமி நமஸ்துதே.

No comments:

Post a Comment